நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோன நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். இதுதவிர தென்னிந்திய நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட் பல அமைப்புகளுக்கு ஒரு கோடி வரை நிதி வழங்கியுள்ளார். என்றாலும் அவரிடம் உதவி கேட்டு பலரும் அணுகுவதால் பெரிய ஹீரோக்களிடம் அரிசி உள்ளிட்ட பொருட்களை திரட்டுகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுப்பதாக நான் அறிவித்த பிறகு சினிமா துறையில் இருக்கும் மற்ற யூனியன்களைச் சேர்ந்த பலரும் என்னை உதவிக்கு அணுகி வருகின்றனர். எனவே, இந்த 3 கோடி ரூபாய் தவிர்த்து விநியோகஸ்தர் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாயும், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயும், தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளேன்.