அழைப்பிதழ், கேடயம் படங்களை இயக்கியவர் ராஜு மோகன். 47 வயதான ராஜு மோகனின் சொந்த ஊர் கோவை. இன்னும் திருமணம் ஆகவில்லை. சினிமா ஆசையில் சென்னை வந்தவர் 2 படங்களை இயக்கி விட்டு 3வது படத்திற்காக கே.கே.நகர் கிழக்கு வண்ணியர் தெருவில் அலுவலம் நடத்தி வந்தார். கொரோன ஊரடங்கு காலம் என்பதால் அலுவலத்திலேயே தனிமையில் தங்கி இருந்த அவர் காலை, இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு மதிய உனவுக்கு மட்டும் நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மதிய உணவுக்கு வராததால் அவருக்கு உணவு எடுத்துக் கொண்டு அவரது அலுவலம் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து திறந்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.