சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஹூபர்ட்சன் தாக்கல் செய்த மனுவில், மாலத்தீவில் டாக்டர்கள், பொறியாளர்கள், கட்டிட பணியாளர்கள், ஆசிரியர்கள், நர்சுகள் என பல்வேறு பணிகளுக்கு இந்தியாவிலிருந்து 29 ஆயிரம் பேர் சென்றுள்ளனர். இவர்களில் சுற்றுலா விசாவில் சென்றவர்களும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி எதுவும் இல்லாமல் திணறுகிறார்கள். அவர்களால் இந்தியாவுக்கும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் செய்து தரவும், பத்திரமாக இந்தியாவிக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.