பெரியகுளம்: பெரியகுளம் அருகே டிரைவருக்கு கொரோனா பாதிப்பு, சந்தை வழி அடைப்பால் ரூ.10 கோடி மதிப்புள்ள பூண்டுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் பூண்டு சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு ரகப்பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 19ம் தேதி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர், மிஜோராம் பகுதியிலிருந்து லாரியில் பூண்டு ஏற்றிக்கொண்டு வடுகப்பட்டி சந்தையில் வந்து இறக்கி விட்டு சென்றார். தற்போது அந்த டிரைவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.