கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையி–்ல், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:தினமும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்று எப்போதும் பிசியாக இருப்பேன். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, முதலில் நன்றாக சமையல் செய்ய கற்றுக்கொள்ள தோன்றியது.