பூந்தமல்லி: சென்னையை அடுத்த மாங்காடு போலீஸ் நிலையத்தில் 56 வயதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருகிறார். இவர் மதுரவாயலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த நாட்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக சென்று ரத்தம் பரிசோதனை செய்து விட்டு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவருக்கு கொரோனே உறுதி செய்யப்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.