திருவள்ளூரில் ரெடிமேட் மாவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெடிமேட் உணவு வகைகளை வாங்க விரும்புகின்றனர். இடியாப்ப மாவு, தோசை மாவு, பரோட்டா செய்வதற்கான மைதா மாவு, அப்பளம், வடகம், பொடி வகைகளை வாங்க விரும்புகின்றனர். போதிய சரக்கு போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலான கடைகளில் இந்த வகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இட்லி, தோசை மாவுகளை அரைப்பதற்கான கடைகளையும் திறக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ரெடிமேட் இட்லி, தோசை மாவு நகரில் கிடைக்கவில்லை. தேவையான பொடி வகைகள் ஆகியவை கடைகளில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related Stories: