பூந்தமல்லி: பூந்தமல்லியில் முழு ஊரடங்கை மீறி ெசயல்பட்ட மளிகை கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். முழுஊரடங்கு உத்தரவு காரணமாகவும் பூந்தமல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கடைகள் திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூந்தமல்லியில் விதிமுறை மீறி செயல்பட்ட மளிகைக்கடையில் 10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளரை சமூகவிலகல் இல்லாமல் நிறுத்தி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.