திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த மாதம், 24ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி, வாகன போக்குவரத்தை தடுத்து வருகின்றனர். போலீசாரின் கெடுபிடியையும் மீறி, பலர் சாலைகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். நேற்றைய தினம் வரை, திருவள்ளூர் மாவட்டத்தில், தேவையின்றி சாலையில் உலா வந்ததாக, 13,183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13,212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.