ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரணம்: திமுக எம்எல்ஏ, எம்பி வழங்கினர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஏழை, எளிய குடும்பங்களுக்கு எம்எல்ஏ, எம்பி ஆகியோர் கொரோனா நிவாரணம் வழங்கினர்.   உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி, உத்திரமேரூர் அடுத்த அழிசூர், களியாம்பூண்டி ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.

அதில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் இவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் ஏழுமலை, பொறியாளர் அணி சசிகுமார், ருத்ரகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: