உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஏழை, எளிய குடும்பங்களுக்கு எம்எல்ஏ, எம்பி ஆகியோர் கொரோனா நிவாரணம் வழங்கினர். உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி, உத்திரமேரூர் அடுத்த அழிசூர், களியாம்பூண்டி ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் வழங்கினர்.