மாநகராட்சி மருந்தக ஊழியருக்கு கொரோனா: மருந்து வாங்கியவர்கள் பட்டியல் சேகரிப்பு

சென்னை: புதுப்பேட்டை பகுதியில் மாநகராட்சி மருந்தகம் இயங்கிவருகிறது. இதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிைடயில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் பணியாற்றிய மாநகராட்சி மருந்தகத்தில் அவரிடம் மருந்து வாங்கிய நபர்களின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: