சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 1.20 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு உதவியாக தற்போது ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போலீசாருக்கு உதவும் வகையில் மத்திய ஆயுதப்படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தானாக முன் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்து தமிழக அரசுக்கு தெரிவித்திருந்தனர். அவர்களின் விருப்பத்தை தமிழக அரசு ஏற்று மத்திய ஆயுதப்படை வீரர்கள் தகுதி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு
- கூட்டாட்சி ஆயுதப்படைகள்
- படைவீரர்
- கொரோனா பாதுகாப்பு: பொலிஸ்
- கொரோனா பாதுகாப்பு: ஓய்வு பெற்ற கூட்டாட்சி ஆயுதப்படைகளுக்கான போலீஸ் அறிவிப்பு