சென்னை: கொரோனா ஊரடங்கு ஒரு மாத்திற்கு மேலாக நீடிக்கிறது. வீட்டுக்குகள் குடும்ப உறுப்பினர்கள் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் குடும்பத்திற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் இருந்து தப்பிக்க பெண்களுக்கு நடிகை வரலட்சுமி ஆலோசனை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: பல பெண்கள் இந்த லாக் டவுன் நேரத்தில் வீட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். பல பெண்கள் தப்பிக்க வழி தெரியாமல் இருக்கின்றனர். வீட்டிலேயே மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் .