உயிரை காப்பாற்றத்தான் போலீஸ் தடியடி: வடிவேலு

கொரோனா வைரஸ் பரவல் சம்பந்தமாக நடிகர் வடிவேலு பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது: என்னவோ நடந்துகொண்டு இருக்கிறது. கடவுள் எல்லோரையும் சோதிக்கிறார். இந்த சோதனையில் ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்றுசேர வேண்டும். போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தை சொன்னால் வெளியே விட்டுவிடுகிறார்கள்.

‘உங்களை காப்பாற்ற நாங்கள் எல்லாம் சாலையில் உயிரை பணயம் வைத்து நிற்கிறோம்’ என்று நமக்கு உதவி செய்கிறார்கள். முன்பெல்லாம் கலவரம் நடந்தால்தான் தடியடி நடத்துவார்கள். இப்போது உயிரை காப்பாற்ற தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories: