பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (55). மின்வாரிய அதிகாரி. இவரது மகள் பத்மபிரியா (24). இவருக்கும், ஆவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ள மேலூர், திருவுடையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜாராம் (27) என்பவருக்கும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்மபிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்தபோது, வீட்டில் பத்மபிரியா எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.