வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர் என கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் நடந்த ஆலோசனையில் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்சினை எனவும், அதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என தெரிவித்தார். ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம் எனவும் கூறினார். கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். கொரோனா தடுப்புப் பணியிலுள்ள அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது என புகழாரம் பேசினார்.

Related Stories: