சேலம்: சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து இறந்த மூதாட்டி, சாகும் முன் இன்ஸ்பெக்டர் உள்பட அனைவரின் காலில் விழுந்து கதறினார் என அவரது மகன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சேலம் அம்மாப்பேட்டை 8வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாமணி(70). இவரது மகன் வேலுமணி(53). கடைவீதியில் எலுமிச்சம்பழம் பழவியாபாரம் செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலையொட்டி ஊரடங்கு உத்தரவால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை உத்தரவை மீறி, வியாபாரம் செய்த வேலுமணியை டவுன் போலீசார் கைது செய்தனர். அவரை விட்டு விடுமாறு கூறி ஸ்டேசனுக்கு சென்ற அவரது தாய் பாலாமணி மயங்கி விழுந்து பலியானார். பாலாமணியின் மகன் வேலுமணி, ஸ்டேஷனில் நடந்தது குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவிவருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது: 40 வருடங்களாக எனது தாய் எலுமிச்சை வியாபாரம் செய்து வருகிறார். 24ம்தேதி கடையில் இருந்த எலுமிச்சம் பழங்களை வெளியே எடுத்தேன்.