சென்னை: மகாராஷ்டிராவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழம் ஏற்றி வந்த 2 பேர் மற்றும் ஒரு சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்களை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று அதிகாலை ஒரு லாரி வந்தது. அதில், 2 டிரைவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று காரணமாக சளி, இருமல், காய்ச்சலினால் பெரிதும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் அப்பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் ஒரு வாலிபருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் பயந்துபோன வியாபாரிகள், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.