அகவிலைப்படி ரத்து மே முதல் வாரம் கறுப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு: அனைத்து துறை சங்கம் முடிவு

சென்னை: தமிழ்நாடு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, ஜனார்த்தனன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் நிதி ஆதாரங்களை பெருக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது, அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் வகையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி மறுப்பு, ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பறிப்பு, பொது வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு என பல்வேறு வடிவங்களில் சம்பள வெட்டினை அமல்படுத்தி அரசு ஊழியர்களின் அடிவயிற்றில் அடிப்பதை உடனே நிறுத்தி அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும். அரசின் இத்தகைய தவறான நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், மே முதல் வாரம் முழுவதும் கறுப்புப்பட்டை அணிந்து பணி செய்து எதிர்ப்பை பதிவு செய்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: