சென்னை: கேரளாவிலுள்ள திருப்புனித்துராவை சேர்ந்த மணிகண்டன் ஆச்சாரி, மலையாளத்தில் கம்மாட்டிபாடம் என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும், கேரளா மரடு பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டாரும் கலந்து பேசி, அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடத்துவது என்று ஆறு மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்திருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும், அவர்கள் தங்கள் திருமண திட்டத்தை கைவிடவில்லை.