சென்னை: சிறுநீரக பாதிப்பால் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் நேற்று காலை உயிரிழந்தார். ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவர் தமிழக காவல் துறையில் கடந்த 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த சீனிவாச ராவ் தலைமை செயலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தற்போது ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.