கடலில் மூழ்கி முதியவர் பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஈசான மூர்த்தி கோயில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (65). தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை மஸ்தான் கோயில் அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு, கடலில் கால் நனைத்தபோது, திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற யாரும் இல்லாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: