குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செதுகரை பகுதியில் நகராட்சி 36 வார்டுகளை சேர்ந்த அதிமுகவினருக்கு தலா 5 கிலோ அரிசி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது, சமூக இடைவெளி கடை பிடிக்காமல் அதிமுகவினர் திரண்டனர். இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் நிவாரண பொருட்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்றதை பார்த்த அமைச்சரும் அதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து, குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.