மூணாறு: மூணாறில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடிய சாலையை ஆக்கிரமித்து தினந்தோறும் இரவு நேரங்களில் ‘படையப்பா’ யானை உல்லாச நடை பயணம் மேற்கொண்டு வருகிறது. கேரள மாநிலம், மூணாறில் தோட்டத்தொழிலாளர்களால் செல்லமாக ‘படையப்பா’ என அழைக்கப்படும் கொம்பன் யானை கடந்த சில நாட்களாக மூணாறில் முக்கிய சாலைகளில் முகாமிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மூணாறில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால் இந்த யானை நேற்று மாலை 6 மணியளவில் மூணாறுக்குள் நுழைந்தது.