சிவகிரி: சிவகிரி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகள் மா, தென்னை மரங்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், வடகரை, செங்கோட்டை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து மா, வாழை, தென்னை, பனைமரங்களை வேருடன் பிடுங்கி சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர், இரை தேடி காட்டு யானைகள் மலையடிவாரத்திலுள்ள விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் உழைப்பும் மூலதனமும் செலுத்தி விளைவித்த பொருட்கள் கைகூடாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.