காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வளத்தோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் 150 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 1100 ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கோதண்டராமன், தலைவர் நந்தகோபால், மாநில தணிக்கைக்குழு இணை செயலாளர் சேரன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை.காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் சுற்றறிக்கையின்படி பொதுப் பணி நிலை திறன்படி செயலாளர் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கையில் எவ்வித புகாரும் இல்லாத, பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்த நிபந்தனைகளுக்கு பொருந்தாத வளத்தோட்டம் கடன் சங்க செயலாளரும் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளருமான வாசுதேவன் கீழ் பேரமநல்லூர் சங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.