டிடிவி கண்டனம் தவறுகளை சுட்டிக்காட்டினால் கைது செய்வதா?

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:  கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related Stories: