சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு. ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.
இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் நேற்று காணப்பட்டது. எனவே இன்று(சனிக்கிழமை) முதல் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.