சென்னை: ஆரோக்கியம் திட்டத்தின் வாயிலாக நிலவேம்பு மற்றும் கபசுரக்குடிநீர் வழங்க உத்திரவிட்ட, முதல்வருக்கு இம்ப்காப்ஸ் தலைவர் டாக்டர் கண்ணன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் ஆயுஷ்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று முதல்வர் ஆரோக்கியம் என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளதை 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னனி சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் பன் மாநில கூட்டுறவு நிறுவனமான இம்ப்காப்ஸ் மற்றும் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள 16 ஆயிரம் சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் வரவேற்கிறோம்.