இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் தங்களது நேரத்தை அதிக நேரம் செய்தித்தாள் படிப்பதற்கு பயன்படுத்துவதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிராண்ட் சொலுஷன்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா குறித்து மக்கள் அதிகாரப்பூரவ செய்திகளை தெரிந்து கொள்ள செய்தித்தாள் வாசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தினமும் 22 நிமிடங்கள் செய்தித்தாள் வாசிப்பதில் செலவழிப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குக்கு பிறகு 38 நிமிடங்கள் செய்தித்தாள் படிக்கின்றனர்.