திருவள்ளூர்: மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை, திருவள்ளூர் மாவட்டத்துக்குள் அனுமதிக்க கூடாது என, போலீசாருக்கு எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தாக்கம், பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இந்த வேளையில் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களை, திருவள்ளூர் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு, எஸ்பி அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார்.