ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இருங்காட்டுகோட்டை, மாம்பாக்கம், வல்லம், வடகால், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், லாரி, செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
மேற்கண்ட தொழிற்சாலைகளில் ஒடிசா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் தங்கி வேலை செய்கின்றனர். தற்போது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 அமலில் உள்ளது. இதையொட்டி, தொழிற்சாலைகள் மூடபட்டுள்ளன. இதனால் வடமாநில ஊழியர்கள் வேலையின்றி முடங்கி உள்ளனர். அவர்களை வேலைக்காக அழைத்து வந்த ஏஜென்டுகள், பணம், பொருள் உதவி செய்யவில்லை.