நலிந்த நடிகர்கள் ஆயிரம் பேருக்கு மளிகைப்பொருள் வழங்கும் ரஜினி

சென்னை: நலிந்த நடிகர்கள் ஆயிரம் பேருக்கு மளிகைப்பொருட்களை வழங்கி உதவியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலாளர்களும் நலிந்த துணை நடிகர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அன்றாட வாழ்க்கை நடத்த வருமானம் இன்றியும் மளிகைப்பொருட்கள் இன்றியும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் உதவி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த துணை நடிகர்கள் ஆயிரம் பேருக்கு ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை வழங்கி உதவியுள்ளார். தனது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் உதவிட ரஜினி உத்தரவிட்டுள்ளார். மக்கள் மன்றமும் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories: