சென்னை: நலிந்த நடிகர்கள் ஆயிரம் பேருக்கு மளிகைப்பொருட்களை வழங்கி உதவியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ஊரடங்கு காரணமாக சினிமா தொழிலாளர்களும் நலிந்த துணை நடிகர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அன்றாட வாழ்க்கை நடத்த வருமானம் இன்றியும் மளிகைப்பொருட்கள் இன்றியும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் உதவி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சத்தை வழங்கினார்.