பேராவூரணி: பேரா வூரணி அருகே சமையல் செய்தபோது குடிசை வீடு தீக்கிரையானது. வீட்டிற்குள் இருந்த மாற்றுத்திறனாளி குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங் கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (35). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி ராஜேஸ்வரி சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கூரையில் தீப்பற்றியது. தீ மளமளவென பரவியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த மேலும் தீ பரவா மல் அணைத் தனர்.