சென்னை: கோவிட்-19க்கு எதிராக சிறந்த செயலிகள், இணையதளங்கள் உருவாக்குபவர்களுக்கு தேசிய, மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: பலவகையான பேரிடர்களையும் கணக்கில் கொண்டு, 25 துறைகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிதல், அந்தத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளைப் பிரித்தளித்தல், கோவிட்-19 க்கான சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள், முதல் நோயாளிகள், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நோயாளிகளின் சிகிச்சை மற்றும் அறிகுறிகளின் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம், மருத்துவமனை அனுமதி, ஒருங்கிணைந்த டோல் ப்ரீ எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல், நிவாரண நிதிகளையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டுதல், கோவிட் பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை ஆன்லைனில் பெறுதல், வீட்டுக்கண்காணிப்பில் சிகிச்சைகளைத் தொடர்தல், நேரந்தவறாத சிகிச்சைகளுக்கான அலாரம், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குதல், அரசுப் பணிகளை ஒருங்கிணைத்தல், அத்தியாவசியப் பணிகளுக்காக பயண அனுமதிகள், தனிநபர்கள் பயண அனுமதி கோருதல், சிறு குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகங்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு உதவுதல், ஆதரவற்றோர், திருநங்கை, திருநம்பி, மாற்றுத்திறனாளர்கள், எச்.ஐ.வி யினர், தங்கும் இடமற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உதவுதல் என்பவை போன்ற பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து, பேரிடர்க்காலத் துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க ஒரு அதிவிரைவுச் செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் செயல் இலக்கு.
கோவிட்-19க்கு எதிராக சிறந்த செயலிகள், இணையதளங்கள் உருவாக்குபவர்களுக்கு பரிசுகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
- வலை உருவாக்குநர்கள்
- கோவிட் - 19
- அண்ணா பல்கலைக்கழகம்
- சிறந்த செயலிகள்
- பரிசுகளுக்கான வலைத்தள உருவாக்குநர்கள்