ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு போன்றவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வாழும் பகுதிக்கு வரத்து துவங்கிவிட்டன. குறிப்பாக, கரடி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களை வாழ்விடமாகவே கொண்டுள்ளன. இவைகள், பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் மறைந்துக் கொண்டாலும், இரவில் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து வீட்டின் கதவுகளை உடைப்பது, கோயில் கதவுகளை உடைத்து எண்ணை மற்றும் பழம் போன்ற பொருட்களை உட்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சில சமயம் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையும் தாக்குகிறது.