தாம்பரம்: பீர்க்கன்காரணை தேவநேசன் நகர் 3வது தெருவில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா மற்றும் முன்னாள் கவுன்சிலர் குணா ஆகியோர் அப்பகுதி மக்களுக்கு நேற்று நிவாரண பொருட்கள் வழங்குவதாக அறிவித்து, ஒரே இடத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்களை திரட்டினர். இங்கு சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக இருப்பதாக இருந்தனர். தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதை பார்த்த முன்னாள் அமைச்சர் அங்கிருந்து வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார்.