திருமண செலவை கொரோனா நிதியாக கொடுத்த நடிகை

சென்னை: பெங்காலி நடிகை பூஜா பானர்ஜி, நிச்சயிக்கப்பட்ட தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டு, திருமண செலவுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இவர், இந்தி டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். தன்னுடன் நடித்த குணால் வர்மாவை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நட்சத்திர ஓட்டலில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை ஏப்ரல் 15ம் தேதி நடத்த முடிவு செய்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஏற்கனவே திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடியாது என்பதால், உடனே அதை ரத்து செய்தார் பூஜா பானர்ஜி.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எங்களின் திருமண கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டோம். ஒரு மாதத்துக்கு முன்பே திருமணத்தை முறைப்படி பதிவு செய்துவிட்டோம். அன்று முதல் நாங்கள் அதிகாரப்பூர்வமான கணவன், மனைவி ஆகிவிட்டோம். இதையடுத்து எங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசியுடன் புதுவாழ்க்கை தொடங்கியுள்ளோம். எங்கள் திருமண செலவுக்காக ஒதுக்கி வைத்திருந்த பணத்தை, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு எங்களால் இயன்ற சிறிய பங்களிப்பாக வழங்குகிறோம்.

Related Stories: