சென்னை: ஊரடங்கு உத்தரவால் உ.பியில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 126 பேர் சென்னை திரும்பினர். தமிழகத்தில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 59 ஆண்கள், 65 பெண்கள், 2 குழந்தைகள் என 126 பேர், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள், ஊரடங்கு உத்தரவால் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஒரு மாதமாக அவதிப்பட்டனர். இதையடுத்து அம்மாநில நிர்வாகம், அவர்களை 3 பஸ்களில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று முன்தினம் தமிழக, ஆந்திரா மாநில எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடிக்கு வந்தனர்.