சென்னை: கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு முடிந்த பிறகு, மகேஷ் பாபு நடிக்கும் படத்தின்பணிகளில் ஈடுபட உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அறிவித்துள்ளார். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கு கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. தமிழில் இப்படம் ரத்தம் ரணம் ரவுத்திரம் என்ற பெயரில் வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்பட பலர் நடிக்கும் இப்படம் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. வரும் 2021 ஜனவரி 8ம் தேதி படம் வெளியாகிறது.