சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் உள்நாடு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைகள் முழுவதுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரசு நாடான அபுதாபியிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த ஒரு தொழிலதிபர் குடும்பம் சிகிச்சை முடித்தனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அவர்கள் நாட்டிற்கு திரும்பமுடியவில்லை. 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த பின்பு நாடு திரும்பலாம் என்று சென்னையிலே தங்கியிருந்தனர். ஆனால் ஊரடங்கு வரும் மே 3 ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.