திருவெற்றியூர்: சென்னையில் கொரோனோ வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க அரசு துறை மற்றும் தனியார் கட்டிடங்களில் சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே காலியாக உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான 10 மாடி குடியிருப்பு, எர்ணாவூர் காசிகோயில் குப்பம் அருகே உள்ள குடியிருப்பு ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.