சென்னை: அரசியல் கட்சிகள் நிவாரணம் வழங்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, திமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வைகோ தொடர்ந்த வழக்கிற்கும் பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வைகோ, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், உணவுப்பொருட்களை நேரடியாக வழங்க மூன்று பேருக்கு மட்டும் அனுமதி என்று கூறப்பட்டிருந்தது.