சென்னையில் கழிவுநீர் லாரி ஓட்டுநரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு

சென்னை: சென்னையில் கழிவுநீர் லாரி ஓட்டுநரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சென்னை பள்ளிகரணை அருகே உள்ள ஐஐடி காலனி 7-வது தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் கழிவுநீர் எடுப்பதற்காக பள்ளிகாரணை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்றிருந்தார்.

அப்பொழுது அதே பகுதியில் வசித்து வந்த சந்திரசேகர் என்பவர் ஓட்டுநர் மணிகண்டனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் கடந்த 10-ம் தேதி இதுகுறித்து பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தகாத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் திட்டியது தொடர்பாக 294B என்ற பிரிவீன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். சந்திரசேகர் திட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: