சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் ஆங்காங்கே முகாம்களில் தங்கி உள்ளனர். இதற்கிடையே ஊரடங்கு 15ம் தேதி முதல் விளக்கி கொள்ளப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. சென்னையில் தங்கி இருந்த ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு ெசல்ல முன்பதிவு செய்தனர். ஆனால் ஊரடங்கு வரும் மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.