ஆன்லைனில் கல்வி கற்க ஏழை மாணவர்களுக்கு ஹெட்போன் வழங்கிய பிரியங்கா சோப்ரா

சென்னை: முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்த அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத அமெரிக்காவை சேர்ந்த ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:என் கணவருடன் இணைந்து நடத்தும் அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஹெட்போன்களை அவர்கள் வீட்டுக்கு சென்று இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளேன்.

இந்த மோசமான சூழலில் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகள் செய்வது முக்கியம். இளைஞர்களின் முன்னேற்றமும், அவர்கள் கல்வியில் வெற்றிபெறுவதும் முக்கியமான அம்சங்கள். எனது நண்பர்களின் உதவியுடன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஹெட்போன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.

Related Stories: