திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆளும் கட்சியினரின் தலையீட்டால், ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களை கிராம மக்கள் முறையாக பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வேலைக்கு போகாமல் வருவாய் இன்றி வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் நலனுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி குடும்பத்துக்கு, ₹1000 நிவாரண உதவி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு, 100 ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. இதனால், அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் பிசியாக இயங்குகின்றன. இந்நிலையில், அரசு வழங்கும் உதவிகளை, உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்கள் வழங்குவது போன்று, மக்களை இழுத்தடிக்கின்றனர்.