சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.