சென்னை,: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குடும்ப அட்டைதாரர் களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோக திட்டப் பொருட்களை வரும் 16ம் தேதி முதல் நியாய விலை கடைகளுக்கு மே மாதத்துக்கான முன் நகர்வினை உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் அனுமதியுடன் முன்னதாகவே தொடங்கி வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் 100 சதவீதம் முன் நகர்வினை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலை கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி நிற்பதை தவிர்க்கும் விதமாக சமூக விலகல் எனும் நடைமுறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.