புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா காணொளி காட்சி மூலம் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இதற்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவை. ஊரடங்குக்குப்பின், பொருளாதாரத்தின் பல துறைகளை புதுப்பிக்க, நிதியுதவி திட்டங்களை பிரதமர் மோடி தைரியமாக அறிவிக்க வேண்டும். இந்த நிதியுதவி திட்டம், நாட்டின் ஜிடிபியில் 5 முதல் 6 சதவீதமாக இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் தங்களின் ஜிடிபியில் 15 சதவீதத்தை நிதியுதவி திட்டங்களாக அறிவித்துள்ளன. அமெரிக்கா 10 சதவீத ஜிடிபியை நிதியுதவியாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் நிதி பற்றாக்குறை, பணவீக்கம் பற்றி எல்லாம் அரசு கவலைப்படக் கூடாது.